Monday, October 13, 2008
நண்பர்கள்
நண்பர்கள்.. ப்ரெண்ட்ஸ்... இந்த வார்த்தைக்கு இருக்கற அர்த்தத்தோட ஆழம் என்னனு நான் கொஞ்சம் நாள் முன்னாடி தான் தெரிஞ்சிகிட்டேன். எனக்கு நெறைய நண்பர்கள் உண்டு. என்னோட வீட்டுக்கு பக்கத்துல இருந்த என்னோட 20 வருட கால நண்பன், அப்புறம் என்னோட கல்லூரி நண்பர்கள் மற்றும் என்னோட வேலை செய்யற தோழர்கள். சின்ன வயசுல இருந்தே எனக்கு நண்பர்கள் மேல அன்பு உண்டு. ஆனா அது எல்லாருக்கும் இருக்கற அந்த ஒரு சின்ன உணர்ச்சி தான். ஆனா தோழமைனு சொல்றது எவளோ பெரிய விஷயம்னு கொஞ்சம் நாள் முன்னாடி அனுபவிச்சி தெரிஞ்சிகிட்டேன். தோள் கொடுப்பான் தோழன்னு சொன்னது எவளோ ஒரு சத்தியமான வார்த்தைனு என்னோட நண்பர்கள் நிருபிசாங்க. என்னோட பிரச்சனை என்னனு எல்லாருக்கும் தெரியரதுல விருப்பம் இல்லாததால அத பத்தி நான் இங்க ரொம்ப சொல்லல. ஆனா இன்னிக்கு நான் அத கடந்து வந்ததுக்கு காரணம் சத்தியமா என்னோட நண்பர்கள் தான். அவங்க அத்தனை பேருக்கும் நான் எவளோ நன்றி சொன்னாலும் அது இணை ஆகாது. கேட்டா கூட உதவி செய்யாத இந்த காலத்துல, தேடி வந்து உதவி செஞ்சவங்களுக்கு என்னங்க கைமாறு செய்ய முடியும்? அவங்கள எல்லாரும் எனக்கு பழக்கம் ஏற்படுத்தி குடுத்த கடவுளுக்கு என் நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment