Thursday, May 8, 2008

தமிழ் பட காமெடி வசனங்கள்

நெறைய தமிழ் படத்துல எல்லாம் காமெடிக்கு நெறைய முக்கியத்துவம் குடுத்து எடுத்திருபாங்க. சில படத்துல எல்லாம் காமெடி இல்லாம சீரியசா சொன்ன டயலாக் எல்லாம் காமெடி ஆயிடும். அந்த மாதிரி சில டயலாக் எல்லாம் பாப்போம்
1. சந்திரமுகி - "என்ன கொடும சரவணன் இது"
சமீப காலத்துல கிட்ட தட்ட எல்லா தமிழ் மக்களும் சொல்ல கூடிய ஒரு டயலாக். எவளோ சீரியஸ் சீன்ல பிரபு இத சொல்லும் போது நமக்கே இது என்ன கொடும னு தோணும்
2. ரன்
வில்லன் - "யாருடா அவன்?"
அடியாள் - "சிவா"
வில்லன் - "எவனா இருந்தா எனக்கென?"
அடங்கொக்கமக்கா பின்ன எதுக்கு டா கேட்ட ?
3. வேட்டையாடு விளையாடு - தட் இஸ் ராகவன் இன்ச்டின்க்ட்
என்ன கொடும சார் இது? கொஞ்சம் கூட கூசாம இத எப்படி சொல்ல முடிஞ்சிது
4. நரசிம்மா - "உண்ண தேடி ஒரு அழகான மகராசன் வருவான்"
எப்படிங்க நம்ம கேப்டன் தான் ஹீரோ னு தெரிஞ்சும் இப்படி ஒரு டயலாக் எழுத மனசு வந்துச்சு? அதான் படத்தோட ரிலீஸ் கூட பாக்காம டைரக்டர் போயிட்டாரு பாவம். இந்த படத்துல வடிவேலு வர சீன் எல்லாம் தூக்கிட்டா படம் முழுக்க காமெடி தான்
5. சுள்ளான் - பார்கறதுக்கு தான் சுள்ளான், சூடானேன்
கொஞ்சமாவது மனசாட்சி இருந்தா இதுஎல்லாம் தனுஷ் சொல்ற மாதிரி எடுபாங்களா? இந்த படத்துல அதிகமா வர வார்த்தை - ஏய். கத்தி கத்தியே காதுல ரத்தம் வர அளவுக்கு அருப்பாங்க.

No comments: